தமிழ்க் கவிதைகளின் இன்றைய_நிலை
1.கவிதை புத்தகங்கள்பிரசுரம் செய்வதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் தயங்குகின்றன.
- நாவல் சிறுகதைகள் போன்றவற்றிற்கான பிரசுர வாய்ப்பு பரவலாகி உள்ளது. இந்த இரண்டுகருத்துக்களை ஒட்டி கவிதைகளுக்கான இடம் ஏன் சுருங்கிப் போனது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
கடந்த வாரம் தமிழின் மிக முக்கிய பதிப்பகமான யாவரும் பதிப்பகத்தின், #யாவரும்.காம் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது, அதில் இணைய இதழுக்கு சிறுகதைகள் கட்டுரைகள் (மட்டுமே) அனுப்ப கேட்டிருந்த செய்தியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, ( அவர்கள் கவிதையைப் புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லவில்லை) கவிதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டதா என்று எண்ணத் தோன்றியது.
தமிழ் கவிதை வாசகர்களும் சமகால தமிழ் கவிதையின் ஊடாக செயல்பட்டு கொண்டிருப்பவர்களும் கவிஞர்களும் இதை ஒரு முக்கிய இலக்கிய போக்கிற்கான தொடக்கமாக கருதவேண்டியுள்ளது. இப்போது மேற்கண்ட இரண்டு கருத்துகளையும் இதனோடு பொருத்திப் பார்த்தால் கவிதை சார்ந்த ஒரு கருத்தோட்டத்தை இன்று நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
You talk me in riddles
I will answer you in rhymes
I love you for a little
I will you love for all time
( #Sea_of_strangers- By #Long_leav)
குறுகிய அளவிலான எளிய கவிதைகள் மூலம் அதிகப்படியான வெகுஜன வாசக பரப்பை பெற்ற லாங் லீவ் எழுதிய மேற்கண்ட கவிதை புத்தகம் ( Lallaby also) அதிகப்படியாக ஆங்கிலத்தில் விற்பனை ஆனாலும் பெரும்பாலான மேலை நாட்டு அறிஞர்கள் அது போன்ற கவிதைகளை எழுதாமல் மிகுந்த தீவிரத் தன்மையுடன் எழுதி வருகின்றனர் ,
மேலை நாடுகளில் கவிதையை அடுத்த தலைமுறை இடம் கொண்டு செல்வதற்கு அங்கே பல்வேறு வகையான திட்டமிடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதுவும் பள்ளி அளவிலிருந்து இளம் கவிஞர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குஅதுபோன்றவேலைகளை செய்ய வேண்டியது மிக முக்கியமான தேவையாக படுகிறது.
நாவல்களும்சிறுகதைகளும் கவிதை புத்தகங்களை விட அதிகமாக வாங்க படுவதாக சொல்லப்படும் கருத்துகளில் உண்மை இல்லாமலும் இல்லை குறிப்பாக மொழிபெயர்ப்பு நாவல்கள் சிறுகதைகள் முன்பு எப்போதையும் விட அதிக அளவில் விற்பனையாகும் கருத்துக்கள் சொல்லப் படுகிறது.
இதைப்பற்றி தொடர்ந்து அதிகப்படியாக நாவல்களையும் சிறுகதைகளையும் வாசிக்கும் என் நண்பர்களிடம் விசாரித்தபோது நாவல்களில் இப்போது பல்வேறு வகையான சோதனை முயற்சிகளும் கதைகளும் நிலப்பரப்புகளும்தமிழ் வாசகர்களுக்கு அதிகப்படியாக தேவைப்படுவதாக அவர் கூறினார் அதனால் அத்தகைய புள்ளிகளை தொடும் நூல்கள் விற்பனை ஆவதாக மேலும் கூறினார்.
அது எனக்கு சரி என்று பட்டதாக தோன்றியது ஏனெனில் நாவல் சிறுகதைகளில் தமிழ் இலக்கிய வாசக மனம் எத்தகைய புதிய கோணங்களையும் களங்களையும் தேடும் மனநிலையில் இருக்கிறதோ அதைப் போலவே கவிதையிலும் அத்தகைய புதிய மொழியையும் களத்தையும் தேடும் மனம் வெளிவரும் கவிதை புத்தகங்களை ஒன்றிரண்டை தவிர மற்றதை வாங்கிப் பார்த்து சலிப்படைந்து விடுகிறது.
இதைப்பற்றி கவிதை எழுதாமல் தொடர்ந்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் என் நண்பனிடம் கேட்டபோது அட்டைகளை எடுத்துவிட்டால் பெரும்பாலான கவிஞர்கள் புத்தகம் ஒரே மாதிரியாக இருப்பதாக சொன்னார். அதுமட்டுமில்லாமல் கவிதைகளில் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தனக்கென்று ஒரு சட்டங்களை வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக சலிக்காமல் எழுதுவதாகவும் அதை படிக்கும்போது நூலின் முடிவு வரை ஆர்வம் தொடர்பு இல்லை என்றும் சொன்னார்.
நாவல் கவிதை சார்ந்து மேற்கண்ட இரண்டு நண்பர்களின் கருத்துக்களை ஒருசேர சேர்த்து பார்க்கும்போது முதலில் குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களுக்கும் வலு சேர்ப்பதாக அமைவதாக #நான் எண்ணிக்கொண்டேன்.
எனவே தமிழ் கவிதை சூழலில் இயங்கும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இதை ஒரு முக்கிய செய்தியாக எடுத்துக்கொண்டு தங்கள் கவிதை மன நிலையை மேலும் மேம்படுத்திக் கொண்டு புதிய வகை களையும் களங்களையும் சோதனைகளையும் கவிதை வெளிகளையும் மொழி அமைப்புகளையும் புதுமையானதாகவும் ரசிக்கும்படியாகவும் அனைவரையும் கவரும் படியாகவும் முன்வர வேண்டும். அப்படி செய்தால்தான் தமிழ் கவிதை உலகம் சார்ந்து தற்போது உருவாகியிருக்கும் ஒரு தேக்கம் உடைபடும்.
தொடரும் …