ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது
அன்பே! உனக்கு போதுமான மனிதனாக இல்லாதற்கு வருந்துகிறேன்
என்னைப்பற்றிய புத்தகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களைப் படித்திருக்கிறாய்.
யாரைப்போலவோ நான் தோன்றக் கூடும் என்ற பயத்தில்
மீண்டும் மீண்டும் வந்தபோதும் உன் வீட்டின் கதவைத் தட்டாமல் அதன் மீது பின்வரும் பல குறிப்புகளை எழுதியிருக்கிறேன்
உப்பு நுனியிருக்கும் விரல்கள் உன்னுடையவை
கடுகு விதை போன்ற அழகான பெண் நீ
ஒரு தும்பியின் வாலை ஊசியாகக் கொண்டு ஆடை தைக்கும் பார்வையற்ற பெண் நீ
ஆமணக்கு இலை காம்பு குழலில் புகைப்பிடிக்கும் கிழவன் நான்
நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அவ்வளவு வயதாகிவிடுகிறது
நம் காதல் காகிதத்தில் செய்த வீடு அது அமைதியாக இருக்க காற்று நீண்ட நேரம் உதவாது.
குளிரை சந்திக்காத மேகம் மழை என்ற சொல்லை கற்பனை கூட செய்யாது
தண்ணீரின் மீது படுத்து தூங்கும்போது வரும் எல்லா கனவுகளும் பலித்துவிடும்
….
….
பிறகு நாம் திரிந்த தோட்டத்தின் எல்லா இடத்திலும் நின்றேன்
தோட்டத்தின் எல்லா காற்றையும் சேகரித்தேன்
அரை முட்டாள் போல அவற்றை அங்கேயே விட்டுவிட்டேன்
மேகங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும்
கற்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும் தேர்ந்தவன் போல
செல்கிறேன் ~ மறைகிறேன்.