பேஸ்புக்கில் இரண்டு கவிஞர்கள்



நான் வேறு யாருமல்ல
வானில் பறக்கும்போது
குளத்தில் தெரியும் பறவைகளை உண்பவன்


நீயும் வேறு யாருமல்ல
குளத்துக்கு மேலே பறவைகள் எதுவும் பறக்காதிருக்க
காவல் காப்பவள் அவ்வளவே


நாம் போன பிறகு
பறவைகள் அதே குளத்தில் நீர் அருந்துகின்றன
நாம் நண்பர்கள் என்று நினைத்து.

Leave a comment