பெண்களுக்காக ஆண்கள் எதற்காக இப்படி உருகுகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை ஆனால் இந்த உலகம் கவிதைகளுக்காக ஏன் இப்படி உருகுகிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் உண்டு. கவிதை தான் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் கண்டுபிடிப்பான மொழி உருவாக்கிய முதல் உயர்ந்த வடிவம் அதனால் தான் உலகம் கவிதைகளுக்காக உருகுகிறது.
ஆகஸ்ட் 24, 1899 இல் பியூனஸ் அயர்ஸில் பிறந்த ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்ஹேஸ் உலக இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ளார். நேற்று ஆகஸ்ட் 24 ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவின் 123 ஆண்டு பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அவரின் பிறந்த நாளை அவர் பிறந்த அர்ஜென்டினா நாடு 2012ஆம் ஆண்டு முதல் வாசகர் தினமாகக் கொண்டாடி வருகிறது.
அவருடைய பிறந்த நாளை ஒட்டி நடக்கும் ட்விட்டர் மாரத்தானில் #MaratonElAleph என்ற ஹேஷ்டேக் இலும் வரும் வெள்ளிக்கிழமை வரை பதிவிடலாம் , போர்ஹெஸ் கலாச்சார மையத்தில் கல்வி மாநாடுகள், கச்சேரிகள், தியேட்டர் உள்ள புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் நூல்களுடன் “தி போர்ஹெஸ் அட்லஸ்” என்ற தலைப்பில் ஒரு புதுமை கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.
இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு பிரபலமாக உள்ள நடிகை மற்றும் பாடகி நாச்சா குவேரா என்பவர் அவருடைய நினைவிடத்தில் கவிதை வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
இக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக அந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கவிதைகளையும் கவிஞர்களையும் கொண்டாடுகின்றனர்.
அத்தகைய வரலாற்று கவிதை வெளியீட்டு நிகழ்வை, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அனைத்து கலாச்சார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிக்கவும் 1974 இல் தொடங்கப்பட்ட Fundación El Libro அறக்கட்டளை மற்றும் SADE (Argentine Society of Writers) ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து நாடு முழுவதும் 250 கவிஞர்களின் கவிதைகள், மூன்று லட்சம் பிரதிகள் அட்டையில் அச்சிட்டு விநியோகித்து உள்ளனர்.
இதற்காக பியூனர்ஸ் அயர்ஸ் நகரத்தில் ஐந்து தெருமுனைகளிலும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள 60 SADE அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் கவிதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விழா முன்னேற்பாட்டளர்கள் எந்தெந்த இடங்களில் எந்தெந்த கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பையும் முன்கூட்டியே சேர்த்து வெளியிட்டுள்ளனர்
ஒரே நேரத்தில் மூன்று லட்சம் கவிதைகள் வெளியிடப்பட்ட அற்புதமான நிகழ்வு கவிதை வாசகனாகவும் கவிஞனாகவும் மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரைப் பற்றியும் அவருடைய கவிதைகளையும் படிக்க கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.
https://www.poetryfoundation.org/poets/jorge-luis-borges