மலைையை நேசிப்பது எப்படி?

மலையை நேசிப்பது எப்படி?

நேர்மறையாக இருப்பது ஒரு மலைக்கு செல்வதைப் போன்றது எதிர்மறையாக இருப்பது ஒரு மலையிலிருந்து கீழே சறுக்குவது போன்றது

-சக் டி

மனித மனம் உயரத்தை மிகவும் இரசிக்கும் அது மலையாக இருந்தால் அதன் உச்சியாக இருந்தால் அம்மலையின் இளவரசன் போன்ற பெருமித உணர்வைத் தரும். அப்படியான ஒரு மலையேற்ற பயணம் பற்றிய கவிஞர் இந்திரன் அவர்களின் கவிதை தரும் அனுபவம் எளிமையான பேரழகி போல இருக்கு.

இந்தக் கவிதையை படிக்கும் போது முதலில் அதை long shot ல ஒரு Visuvalise பிறகு Close-up ல ஒரு Visualise என காட்டிவிட்டு

மலையை தன்னோடு உடன் ஏறி வந்த நண்பனைப் போல insight ஆகக் காட்டுவது மாறுபட்ட கோணம் இது படிப்பவர்களுக்கு நல்ல அனுபவம் தரும்

கவிதையில் juxtaposition மிக முக்கியமான அழகியல் அதை மலை என்ற மாபெரும் அமைப்பை எளிய மனிதனைப் போல அல்லது ஒரு செல்ல பிராணி போல கூட்டிசெல்வதாக கூறியுள்ளார்
சீனத்து நீர்வண்ண ஓவியம் என முதல் அலைவுறு பரப்பு | தெரிந்தவர்களுக்கு சீன ஓவிய அழகும் தெரியாதவர்களுக்கு அது சார்ந்த தேடலையும் தருகிறது
பிறகு
“திடீரென ஐம்பது வயது” என இரண்டாவது அலைவுறு பரப்பை முன்வைக்கிறது

முதல் அலைவுறுதல் மிக வலிமையாகவும் இருப்பது மலை ஏற்ற களைப்பையும்

இரண்டாவது மென்மையாக இருப்பது ஏறிய பின் வரும் ஆசுவாசத்தையும் தருவதாகக் கொள்ளலாம்

ஆனால் எனக்கு இரண்டாவது அலைவுறுதல் வரும் இடம் மகிழ்வின் சாதிப்பின் உச்சமாக அமையும் மலை உச்சி என்பதால் இன்னும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்

இந்தக் குறையை மலையை சகாவாக மாற்றியது தூள்தூளாக்கிவிட்டது

இப்போதுதான் புரிகிறது
நான் மலை ஏறியபோது
மலையும் என்னோடு ஏறி வந்திருக்கிறது என்று.
சமீப கவிதைகளில் மிக எளிமையான எல்லோருக்குமான நல்ல கவிதை புதியதாக வாசிக்க வருபவர்களுக்கு சுட்டிக்காட்ட கிடைத்த கவிதை இது . நமது பார்வையை கவிதையை ஒட்டி எழுதிப் பார்க்க கிடைத்த கவிதை

மலைக்காட்சி

சிகரத்தில் ஏற ஏற
சுவாரசியமாகி விடுகிறது மலை.
கீழே உள்ள மனிதர்கள்
எறும்புகளாக மாறிப் போகிறார்கள்.
தூரத்திலிருந்து பார்த்தபோது
குழந்தைகள் வரைவது போலிருந்த மலை
இப்போது
சீனத்து நீர்வண்ண ஓவியம்போல் தெரிகிறது.
பிறந்த குழந்தைக்குத் திடீரென
ஐம்பது வயது ஆகிவிட்டது போல
பார்வையில் பெரிய பக்குவம் வந்து விடுகிறது.

இப்போதுதான் புரிகிறது
நான் மலை ஏறியபோது
மலையும் என்னோடு ஏறி வந்திருக்கிறது என்று.
poetpoovithal@gmail.com

கவிதை என்னும் மின்சாரம்

கவிதை என்னும் மின்சாரம்

ஒரு கவிதையில் ஏதேனும் இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்

கவிதை என்பது அவற்றிற்கிடையே கடந்து செல்லும் மின்சாரம் போன்றது

அந்த இரண்டு விஷயம் எவை என்பதைக் கவிஞன் தான் தீர்மானிக்க வேண்டும் அப்படி தீர்மானிப்பதில் தான் கவிஞரின் அறிவும், நுட்பமும், உழைப்பும் இருக்கின்றன.

சொற்களால் கட்டமைத்த கவிஞனால் மட்டுமே உருவாக்க முடிந்த ஒரு காட்சிப் படிமம்
அல்லது சொற்களால் உருவாக்கப்பட்ட ஒரு வெளி
அதற்கு இணை கோடாகவோ அல்லது நேரெதிராகவோ கவிஞன் சொல்ல வரும் செய்தி அல்லது கவிஞனின் மனம் கவிஞனின் உலகம் எதுவாகவும் இருக்கலாம்
சில நேரங்களில் அது வெளிப்பாட்டு உத்தி ஆக கூட இருக்கலாம்

கடுக்காய் பால்

+

கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து

=

சுவர்

கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.

[ ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.

நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.

{ முத்துராசா குமார் – நன்றி – அரூ இதழ் }

உத்திக்கும் கருத்துக்கும் இடையில் வைத்து கவிதையை உருவாக்குகிறார்.
அற்புதமான கவிதையாக மாறுகிறது
முதலில் உருவாகும் கட்டுமானத்தின் மீது
கொத்தனும் சித்தாளும் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்பதில் எளிய மனிதர்களின் உழைப்பு மனிதனின் அன்றாட அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைப் போன்றது என்ற ஆழமான உள் உணர்வினால் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்று சொல்கிறார்

அடுத்ததாக உள்ள


ஆணி இறங்கிய நெற்றியில்
தொன்ம புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்


என்ற பத்தியில் மிக நுட்பமான ஒரு காட்சிப் படிமத்தை உருவாக்குகிறார்
அதுமட்டுமல்லாமல் இந்த பத்திக்கு மேல் இருக்கும் அடைப்புக்குறி ஒரு புகைப்பட சட்டகம் போல் காட்சியளிப்பதும் ஒரு மாறுபட்ட அழகியல்

சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்

இந்தக்கடைசி பத்தியில் இறுதி வரிகள் இந்த கவிதையை மிக அற்புதமாக முடித்து வைக்கிறது

ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனதிற்கு நிறைய திறப்புகளை தரும் இந்த கவிதை மிக நேர்த்தியான பண்பினை மிக இயல்பான ஒரு புதிய உத்தியோடு இணைத்துள்ளது .

வாழ்த்துக்கள் முத்துராசா குமார்

முத்துராசா குமார், பிடிமண் (சால்ட் வெளியீடு) என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் கவிஞர்