தாத்தாவின் செய்தித்தாள்
தாத்தாவுக்கு
காலை உணவுக்குப் பின் தினமும்
நாளிதழ்களில் வரும்
கண்ணீர் அஞ்சலி விளம்பரங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு
பரீட்சைக்கு படிப்பது போல்
மீண்டும் மீண்டும் அவற்றைக் படித்து முடிக்கிறார்
அவரது பெயரின் முன் பகுதியோ பின் பகுதியோ
எழுதப்படவில்லை என்பதை உணரும் போது
ஒரு பெருமூச்சு விடுவார்
கடைசியாக
செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு
அமைதியாக யோசிப்பார்
ஒரு வேப்பம்பூவோ புளியம்பூவோ அல்லது ஒரு பழுத்த இலையோ
அதன் மீது விழுந்ததும்
அவரும் அஞ்சலி செலுத்தியது போல
எழுந்து நடப்பார்.
விளையாட்டு
நான் என் மகன்களுடன்
பார்வையற்ற மனிதனின் கோழியாக நடிக்கிறேன்
இந்த பாத்திரத்திற்கு
நான் சரியாக பொருந்துகிறேன் என்று
எனக்குத் தெரியும்
இது
மறக்க முடியாத விளையாட்டு.
இரண்டு பெண்கள்
தண்ணீருக்கு என்று ஒரு கல்லறை உள்ளது அது மேகம்.
அங்கிருக்கும் புற்களில் என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பதற்கு விரும்புகிறேன்.
பீச் வாலிபால் விளையாடும் பெண்களைப் போல அவற்றை அங்கு குதித்து விழுந்து விளையாட விடுவேன்.
இமைக்க வழியின்றி இளம் பெண்ணின் மார்பு போல மேலிருந்து பூமியைப் பார்ப்பேன்.
நானும் ஆட்டுக் குட்டிகளும் பூமிக்குத் திரும்பி வந்ததும் செடிகொடிகளிடம் இந்தச் சுற்றுலா பற்றி பேசிக் கொள்வோம்.

