வெட்ட வெளியில் இருக்கும் பியானோ மீது
ஆலங்கட்டி மழை பெய்கிறது
மழையைக் கேட்டு இசையைப் பார்க்கும்
சிறுவன் கண்களில்
இரண்டு தொட்டி மீன்கள் இசைக்கின்றன.
எனவே
திறந்து இருக்கும் சவப்பெட்டியில் விழும் மழைத்துளிகளால்
சடங்குகளுக்குப் பிறகு இறந்தவன் எப்படியும் முளைத்துவிடுவான்