வெட்ட வெளியில் இருக்கும் பியானோ மீது
ஆலங்கட்டி மழை பெய்கிறது
மழையைக் கேட்டு இசையைப் பார்க்கும்
சிறுவன் கண்களில்
இரண்டு தொட்டி மீன்கள் இசைக்கின்றன.
எனவே
திறந்து இருக்கும் சவப்பெட்டியில் விழும் மழைத்துளிகளால்
சடங்குகளுக்குப் பிறகு இறந்தவன் எப்படியும் முளைத்துவிடுவான்
பேஸ்புக்கில் இரண்டு கவிஞர்கள்
நான் வேறு யாருமல்ல
வானில் பறக்கும்போது
குளத்தில் தெரியும் பறவைகளை உண்பவன்
நீயும் வேறு யாருமல்ல
குளத்துக்கு மேலே பறவைகள் எதுவும் பறக்காதிருக்க
காவல் காப்பவள் அவ்வளவே
நாம் போன பிறகு
பறவைகள் அதே குளத்தில் நீர் அருந்துகின்றன
நாம் நண்பர்கள் என்று நினைத்து.
ஓலைச்சுவடி இதழில் கவிதைகள்
she never used her mouth to chat
she never used her mouth to chat
on that day was
as quiet as the land
where only
one person had settled,
i gave her a strange bracelet to
wear only in memory
she smiled.
i knew someone who had walked a few steps
even after death
i went to his grave and brought the hearthstone
we cooked some wild tubers
after a wild feast, she smiled.
in that winter
i preferred some warm-hot water to set up spring
she played and smiled.
we sat under a tree that had heart-shaped leaves
she drew a girl and placed a leaf in the place of the heart
i also pierced eight or nine leaves layers on my shirt
later i knelt down
and gave the green hearts one by one
her face glowed like seeing the sun even after it had set
i said
no matter how many hearts
will give it all to you
i had more to say might not verbalize it all
the only use of our body is to be in the word
every star in the sky will call us tonight
she smiled, at first,
the venus blinked with the color of love
i put my ears near her eyes and felt the sound of love.
Goldenrod
Goldenrod- A Stunning Poetry Collection from Maggie Smith
In this pandemic, we all felt most of the days we spent were so much of a despondency. As usual, For relief, I have chosen to read poetry that only gave rise to me.
In the last few days, I have read a stunning poetry collection from a pushcart prize champion Maggie Smith’s Goldenrod. ( most of us may be remembered Good bones poet Maggie Smith)
Really it opens a new vision to my poetry world with simple phrases she made a greater imageries.
Choose it you can enjoy as like me
How dark the beginning
…….
We talk so much of light, please
let me speak on behalf
of the good dark. Let us
talk more about how dark
the beginning of a day is.
……Imagine if I could
wear my home and call it my body,
wear my body and call it home.
Where Honey Comes From
For more poems from… Maggie Smith
When my daughter drizzles gold
on her breakfast toast, I remind her
she’s seen the bee men in our tree,
casting smoke like a spell until
the swarm thrums itself to sleep.
She’s seen them wipe the air clean
with smoke, the way a hand smudges
chalk from a slate, erasing danger
written there, as if smoke revises
the story of the air until each page
reads never fear, never fear. Honey
is in the hive, forbidden lantern
lit on the inside, where it must be dark,
where it must always be. Honey
is sweetness and fear. I think
the bees have learned to embroider,
to stitch the sky with warnings
untouched by smoke. Buzzing
is the sound of bees perforating the air,
as if pulling thread through over
and over, though the thread too is air.
தாத்தாவின் சொற்றொடர்கள்
தாத்தாவின் சொற்றொடர்கள்
அந்த வயதான மனிதனுக்கு அதிகபட்சம் ஐந்து வயதுதான் இருக்கும்”
இப்படி ஒரு தொடரை தாத்தா தினமும் சொல்லிவிடுவார்.
அப்போது கடவுளை விட அழகாக இருப்பார்.
நுணாமர நுகத்தடி போல இருக்கும் பாட்டி
பல் துலக்கி ~ வாயைத் துவைத்தது போல கொப்பளிப்பதாகக் கூறி தாத்தா சிரிப்பார்
அப்பாவும் அப்பபடி தாத்தா சொன்ன ஒரு வாக்கியத்திலிருந்துதான் பிறந்திருக்கிறார் அவ்வளவு சமநிலையின்மை இருக்கிறது அவர் இயல்பில்
தாத்தாவின் குடிசையில்
தொங்கும் குட்டித்தழைகளோடு ஒரு வெள்ளாட்டுக் குட்டியே கதவாகப் இருந்தது.
விரல்களை வைத்துக்கொண்டு உள்ளங்கையை விற்றுவிடு என எதிரே வந்தவரிடம் சொல்லிவிட்டு தாத்தா ஏர் கலப்பையோடு நடந்ததைதான் கடைசியாகப் பார்த்தேன்.
தாத்தா படுத்தப் படுக்கையாகிப் போன போதும்
அவர் உடலில் விளைச்சல் தரும் பகுதியாக வாய் மட்டும் இருந்தது.
இன்று காலை என் மனைவியிடம்
“நேற்று இரவு யாரோ என் தலையை இந்த உடம்பில் பொருத்திவிட்டு போனது போல உடல் அசதியாக இருக்கிறது” என்றேன்
அருகிலிருந்தவர்கள் வாயை மூடிய பிறகும் தலைமுடியாலும் சிரித்தார்கள்.
தாத்தா எனக்குச் சமீபத்தில் வசிக்க ஆரம்பித்திருப்பது போல உணர்ந்தேன்
இனிமேல்
ஒரு விண்மீனின் கடவுள் நான்,
சரி சரி.. நீங்களும் ஏதோ ஒரு விண்மீனின் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.
ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது
ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது
அன்பே! உனக்கு போதுமான மனிதனாக இல்லாதற்கு வருந்துகிறேன்
என்னைப்பற்றிய புத்தகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களைப் படித்திருக்கிறாய்.
யாரைப்போலவோ நான் தோன்றக் கூடும் என்ற பயத்தில்
மீண்டும் மீண்டும் வந்தபோதும் உன் வீட்டின் கதவைத் தட்டாமல் அதன் மீது பின்வரும் பல குறிப்புகளை எழுதியிருக்கிறேன்
உப்பு நுனியிருக்கும் விரல்கள் உன்னுடையவை
கடுகு விதை போன்ற அழகான பெண் நீ
ஒரு தும்பியின் வாலை ஊசியாகக் கொண்டு ஆடை தைக்கும் பார்வையற்ற பெண் நீ
ஆமணக்கு இலை காம்பு குழலில் புகைப்பிடிக்கும் கிழவன் நான்
நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அவ்வளவு வயதாகிவிடுகிறது
நம் காதல் காகிதத்தில் செய்த வீடு அது அமைதியாக இருக்க காற்று நீண்ட நேரம் உதவாது.
குளிரை சந்திக்காத மேகம் மழை என்ற சொல்லை கற்பனை கூட செய்யாது
தண்ணீரின் மீது படுத்து தூங்கும்போது வரும் எல்லா கனவுகளும் பலித்துவிடும்
….
….
பிறகு நாம் திரிந்த தோட்டத்தின் எல்லா இடத்திலும் நின்றேன்
தோட்டத்தின் எல்லா காற்றையும் சேகரித்தேன்
அரை முட்டாள் போல அவற்றை அங்கேயே விட்டுவிட்டேன்
மேகங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும்
கற்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும் தேர்ந்தவன் போல
செல்கிறேன் ~ மறைகிறேன்.
கடவுளுக்கு வயதாகட்டும்
கடவுளுக்கு வயதாகட்டும்
வருத்தங்களுடன் புறப்பட்ட பெண்ணின் பாடலில் இருந்த மலர் அசைந்தபடியே இருந்தது
தனக்குப் பிடித்தமானவர்களின் நிழலைச் சேமிக்கும் சிறுமி வெளிச்சமான உள்ளங்கை காட்டி அழைத்தாள் கரப்பான்பூச்சிகள் நகைச்சுவை வடிவம் மிக்கவை என்றாள்.
பெண்ணின் வருத்தங்களின் அருகில் கரப்பான்பூச்சி பற்றிய ஒரு சித்திரம் வந்ததும் மழை பற்றி அப்பாவியான எண்ணம் உடைய அவள் வருத்தங்களை அணிகலனாக மாற்றுவது குறித்து யோசித்தாள்.
முதலில் கண்களில் தொடங்கினாள் அந்தி சூரியனின் சாய்வை எடுத்து பூசினாள்
மனதை காகிதம் போல பரப்பினாள் பெயரில்லாத உயிர்களை நேசிப்பதாக எழுதினாள்
கூந்தலைக் களைத்தாள் சிங்கங்களின் இனச்சேர்க்கை பார்க்க ஆவல் கொண்டாள்
வளையல்கள் உடையும்படியாக இசைத்தாள் : அவளிடம் இருந்த பழம்பாடலைப் பாடினாள்.
மழை பெய்யாமல் போனால் ஏழைகளுக்குப் பதிலாக கடவுளுக்கு வயதாகட்டும்
~ உரக்க கத்தினாள்:சிரித்தாள்
நடந்தாள்
எல்லா பாதையிலும் அவளோடு உரையாட ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்
பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.
பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.
என் பெயரைப் புதுமையாக உச்சரித்தபடி
இறந்தவர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்றாள்.
கவலைப்படாதே நான் இறந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை விற்கிறேன் என்றேன்.
எப்போதும் போலன்றி உள்ளங்கை அளவு அதிகம் விரிந்திருந்தது வானம்
எப்போதும் போலன்றி முழங்கால் அளவு ஆழம் கூடியிருந்தது கடல்
எப்போதும் போலன்றி கண் சுருக்கும் அளவு ஒளி கூடி இருந்தது சூரிய சாய்வில்
கடவுளையும் காதலியையும் சமமாக நடத்துவதற்கு சிறந்த வழிமுறை கொஞ்சமாக மது அருந்துவதுதான்
அதிலும் காகங்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட மது என்றால் கொஞ்சம் பரவாயில்லை
அப்போதுதான் மரக்கிளையைப் பறவைகளின் நாற்காலி என்று சொல்லமுடியும்.
துப்பாக்கிச்சூடுகளைப் போல தீவிரமாக குரைக்கும் ஓநாய்களின் இயல்பு என் வயிற்றுக்கு எப்படி வந்தது?
காதலியிடம் கேட்டேன் : கொஞ்சம் மது அருந்தியிருந்தேன்.
பூனையின் கண்களை அதிஷ்ட கற்களாக பெற்ற அவள்
விதை நெல்லில் இருக்கும் நீரைப் பருகு என்றாள்.
எல்லா தாய்வழி கோபங்களும் நீங்கிவிட
நீண்டகாலமாக சிறுவனாக இருந்து
நான் முளைப்பதை நானே பார்த்தேன்
காதலில் இருந்து
வாசகசாலையில் என் கவிதைகள்
அவரவர்_முகம்
அவரவர் முகம்
சதுரத்தின் மீது
ஒரு சிலுவை விழுந்ததும்
உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின
ஒன்றில் தேவன்
ஒன்றில் சாத்தான்
மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்-
ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர்
சிலுவையை அருகிலிருந்த
வட்டத்தின் மீது நகர்த்தியதும்
அதிலிருந்து உருவான விசிறிகளை எடுத்து
நால்வரும் காற்று வீசினார்கள்
அப்போது,
அடுத்த சில மூச்சிற்குப் பிறகு
இறப்பவனைப் போல
காற்று திக்குமுக்காடியது
தேவனும் சாத்தானும் முறைத்தபடி இருந்தார்கள்
எங்களை முடிந்தால் பிடியுங்கள் என
செவ்வகங்களை மாட்டிக் கொண்டு ஓடிய சிறுவர்கள்
வீட்டுப் பாடம் எழுதிய சிலேட்டுகளில்
ஆளுக்கொரு உருவம் கிறுக்கியிருந்தார்கள்
வீடுவரை துரத்திவந்த தேவனும் சாத்தானும்
இரண்டு உருவத்திலும் அவரவர் முகத்தையே கண்டார்கள்.
மனிதனை மீனாகவும் மீனை மனிதனாகவும் மாற்றுதல்
தண்ணீரில் விழுந்த அவனிடம்
“நீயும் மீன் தான் ~ நீயும் மீன்தான் ” என
பல முறை சொன்னபிறகுதான் நீந்தத் தொடங்கினான்
அவனை மீனென நம்பவைக்க
சுண்டு விரலைப் புழுவென காட்டி
கையை தூண்டில் போல வீச வேண்டி இருந்தது.
நீந்தி கரையேறிய பிறகு
அவனை மனிதன் என்று நம்பவைக்க
பெரிய சிரமமேதும் படவில்லை
தள்ளிவிட்டது நான் தான் என்று சொன்னேன்
என்னைத் துரத்தியபடி மனிதனாகி விட்டான்.
மேலும் வாசிக்க…
https://www.vasagasalai.com/kavithaikal-poovithal-umesh/